ஆந்திராவில் ஆட்டோ மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தாடிமரி அருகே கொண்டம்பள்ளியில் உயர் மின் அழுத்த கம்பி ஆட்டோ மீது அறுந்து விழுந்ததில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதில், ஆட்டோவில் இருந்த 8 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்தவர்கள் என்பது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.